free website hit counter

சுவிற்சர்லாந்தின் ஃபெடரல் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் லூசேன் (EPFL) மற்றும் வவுட் யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல் ( CHUV) ஆகிய மருத்துவ ஆய்வகங்களின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸை குறிவைத்து "மிகவும் சக்திவாய்ந்த" மோனோக்ளோனல் ஆன்டிபாடியைக் கண்டறிந்துள்ளனர்.

இத்தாலியில் இன்று திங்கட் கிழமை, நடைபெறும் 24 மணி நேர பொது வேலைநிறுத்தத்தின் காரணமாக, நாடு முழுவதும் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 127 அலிடாலியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் இத்தாலியச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிற்சர்லாந்தில் இன்று முதல், தடுப்பூசி போடப்படாதவர்கள், சோதனை செய்ய சுமார் 50 பிராங்குகளை செலுத்த வேண்டும். இதேவேளை தடுப்பூசி போடுபவர்களுக்கு 50 பிராங்குகளுக்கான போனஸ் வவுச்சர்களை ஊக்குவிப்பு அன்பளிப்பாக வழங்கவுள்ளதாகவும் அறியவருகிறது.

இத்தாலியில் நேற்று சனிக்கிழமை பாரிய அளவிலான எதிர்புப் போராட்டங்கள் வெடித்தன. தலைநகர் ரோமின் ரோமின் பியாற்ஸா டெல் போபோலோவில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள், பிரதமர் டிராகி, மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பிக் கூச்சலிட்டனர்.

இத்தாலியின் பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் பேத்தி ரேச்சல் முசோலினி, ரோம் நகர மன்றத் தேர்தலில் மிகவும் பிரபலமான வேட்பாளராக உருவெடுத்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் தொற்றியல் நிலைமை மேம்பட்டு வருகிறது. ஆனால் குளிர்காலத்தினை நோயற்ற முறையில் எதிர்கொள்வதற்கு வேண்டிய தடுப்பூசி விகிதம் இன்னும் குறைவாக உள்ளது.

இத்தாலியின் லினாத்தே விமான நிலையத்திலிருந்து, சார்த்தீனியாத் தீவு நோக்கி, கடந்த ஞாயிறு பிற்பகல் பறந்த சிறிய ரக தனியார் விமானம் ஒன்று, மிலானோவுக்குச் சமீபமாக, சென் டொனாடோ நகரில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

மற்ற கட்டுரைகள் …