சுவிற்சர்லாந்தில் செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து நுழைவு விதிகளை கடுமையாக்குவதற்கு மத்திய கூட்டாட்சி அரசு ஆலோசித்துள்ளது. இதற்கான ஆலோசனைகளை ஏற்கனவே மாநில அரசுகளிடம் கலந்துரையாடியுள்ள மத்திய அரசு, இன்றைய கூடலில், இது தொடர்பான இறுதி முடிவினை அறிவிக்கவுள்ளது.
இத்தாலியில் அக்டோபர் 15 முதல் பணியிடங்களிற்கும் " கிறீன்பாஸ் " கட்டாயமாகிறது.
இத்தாலியில் வரும் அக்டோபர் 15 முதல், அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் செயலாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ' தடுப்பூசிச் சான்றிதழ்' தேவை கட்டாயமாகிறது. இத்தாலியை "பாதுகாப்பு நிலையில்" வைத்திருக்கும் நடவடிக்கையாக இத்தாலியப் பிரதமர் இதனை இன்று அறிவித்தார்.
சுவிட்சர்லாந்தில் 7,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் !
சுவிற்சர்லாந்தில் 4 முதல் 15 வயதுக்குட்பட்ட 7,353 பள்ளி மாணவர்கள் நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சமீபத்திய தகவல்கள் சில தெரிவிக்கின்றன.
இத்தாலியில் தடுப்பூசி மூன்றாவது டோஸ் அடுத்தவாரம் முதல் !
இத்தாலிய அரசு அடுத்த வாரத்தில் இருந்து, மிகவும் ஆபத்தான பிரிவுகளில் உள்ள சுமார் மூன்று மில்லியன் மக்களுக்கு கோவிட் எதிர்ப்பு தடுப்பூசியின் மூன்றாவது பூஸ்டர் ஷாட்களை வழங்கும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்தில் கோவிட் சான்றிதழ் சோதனையில் காவல்துறை ?
சுவிற்சர்லாந்தின் புதிய கோவிட் -19 சான்றிதழ் தேவை நேற்று திங்கட் கிழமை முதல், குறைந்தபட்சம் ஜனவரி 24, 2022 வரை நடைமுறையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் 'நான்காவது அலைக்கு எதிராக தடுப்பூசி போடுங்கள்' வாரம் !
ஜேர்மனியில் 'நான்காவது அலைக்கு எதிராக தடுப்பூசி போடுங்கள்' எனும் செயல் வாரம் நேற்று திங்கட்கிழமை ரேம்பமானது.
சுவிற்சர்லாந்தில் இன்று முதல் கோவிட் சான்றிதழ் விதிகள் கட்டாயமாகிறது !
சுவிற்சர்லாந்தில், இன்று முதல், உணவகங்கள், பார்கள், உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு நிகழ்வுகள், மற்றும் கலாச்சார கூடல்கள் மற்றும் தனியார் விருந்துபசாரங்களின் உட்புறப் பகுதிகளில் நுழைய முடியாது.