free website hit counter

சுவிற்சர்லாந்தில் செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து நுழைவு விதிகளை கடுமையாக்குவதற்கு மத்திய கூட்டாட்சி அரசு ஆலோசித்துள்ளது. இதற்கான ஆலோசனைகளை ஏற்கனவே மாநில அரசுகளிடம் கலந்துரையாடியுள்ள மத்திய அரசு, இன்றைய கூடலில், இது தொடர்பான இறுதி முடிவினை அறிவிக்கவுள்ளது.

இத்தாலியில் வரும் அக்டோபர் 15 முதல், அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் செயலாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ' தடுப்பூசிச் சான்றிதழ்' தேவை கட்டாயமாகிறது. இத்தாலியை "பாதுகாப்பு நிலையில்" வைத்திருக்கும் நடவடிக்கையாக இத்தாலியப் பிரதமர் இதனை இன்று அறிவித்தார்.

சுவிற்சர்லாந்தில் 4 முதல் 15 வயதுக்குட்பட்ட 7,353 பள்ளி மாணவர்கள் நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சமீபத்திய தகவல்கள் சில தெரிவிக்கின்றன.

இத்தாலிய அரசு அடுத்த வாரத்தில் இருந்து, மிகவும் ஆபத்தான பிரிவுகளில் உள்ள சுமார் மூன்று மில்லியன் மக்களுக்கு கோவிட் எதிர்ப்பு தடுப்பூசியின் மூன்றாவது பூஸ்டர் ஷாட்களை வழங்கும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின் புதிய கோவிட் -19 சான்றிதழ் தேவை நேற்று திங்கட் கிழமை முதல், குறைந்தபட்சம் ஜனவரி 24, 2022 வரை நடைமுறையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் 'நான்காவது அலைக்கு எதிராக தடுப்பூசி போடுங்கள்' எனும் செயல் வாரம் நேற்று திங்கட்கிழமை ரேம்பமானது.

சுவிற்சர்லாந்தில், இன்று முதல், உணவகங்கள், பார்கள், உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு நிகழ்வுகள், மற்றும் கலாச்சார கூடல்கள் மற்றும் தனியார் விருந்துபசாரங்களின் உட்புறப் பகுதிகளில் நுழைய முடியாது.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: