free website hit counter

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமை முதல்வர் சி. ஜோசப் விஜய், இன்று(ஜூன் 16) குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு எங்கள் அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாக நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். அதன்படி முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு;-

“*நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

* திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும்.

* மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு த.வெ.க. அரசு தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது.

* குலசேகரப்பட்டினம் விண்வெளி உற்பத்தி மையத்தை, தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவிக்க வேண்டும்.

* காலநிலை தாங்குதன்மை பெருந்திட்டத்தை தொடங்க வேண்டும்.

* அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம் ஒன்றை தமிழ்நாடு அரசு முன்மொழிகிறது.

* சென்னை-குமரி அதிவேக ரெயில் வழித்தடம் அமைக்க வேண்டும்.

* செங்கல்பட்டு-திருச்சி ஜி.எஸ்.டி. சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.

* திருச்சி-கரூர், கரூர்-கோவை சாலைகளை 6 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும்.

* ஒகேனக்கல் 3-ம் கட்ட கூட்டுக்குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு ரூ.2,283.40 கோடி நிதியை வழங்க வேண்டும்.

* இலங்கை, பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் மீன்படி உரிமையை பாதுகாத்து, பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டும்.

* தமிழ்நாட்டிற்கான 2-வது எய்ம்ஸ் மருத்துவமனையை கோவையில் அமைக்க அனுமதிக்க வேண்டும்.

* தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்.

* கல்வி நிதியை விடுவிக்க புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு நிர்பந்திக்கக் கூடாது.

* இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த விழைகிறோம்.

* பெண்களின் பாதுகாப்பிற்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் தேவை.

* அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைக்க வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம் ஒன்றை முன்மொழிகிறோம்.”

இவ்வாறு முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதின் பின்னர் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கலந்து கொள்ளும் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று திருச்சியில் இடம்பெற்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்தார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: