free website hit counter

டில்லியில் நடிகர் விஜயிடம் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணைகள் இன்று சுமார் ஆறு மணிநேரம் நடைபெற்றதாகவும், இவ் விசாரணையின் தொடர்ச்சி நாளையும் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்தூணில தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் ஆண்டு இறுதி பொருளாதார மதிப்பாய்வின் கணக்கீடுகளின்படி, இந்தியா ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.

தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக ராஜதந்திர தலையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உள்நாடு, வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு சேவைக்கான புளூபேர்ட்- 6 செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பெயர் மாற்றத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …