லெபனானில் போர்நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறினார். இஸ்ரேலியப் படைகளுக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவுக்கும் இடையே வியாழக்கிழமை இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் ஒப்புக்கொள்ளப்பட்ட, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட 10 நாள் போர்நிறுத்தத்தின் மீதமுள்ள காலத்திற்கு, அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் நீரிணை திறந்திருக்கும் என்று அராக்சி X தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தத் திறப்பின்போதும், கப்பல் போக்குவரத்திற்கு பாதுகாப்பானது என்று ஈரான் கருதும் பிரத்யேக பாதைகள் வழியாகவே போக்குவரத்து நடைபெறும் என்றும், கடற்படைக் கப்பல்களுக்கு இதில் அனுமதி இல்லை என்றும் ஒரு மூத்த ஈரானிய அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க; ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தம் "விரைவில்" வரும் என்று தாம் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார், இருப்பினும் அதற்கான காலக்கெடு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.