free website hit counter

நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் இல்லங்களுக்கு தீ வைத்தனர்.

இதையடுத்து, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றது.

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்கு நேபாள அரசு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், தலைநகர் காத்மண்டுவில் திங்கள்கிழமை காலை குவிந்த இளைஞர்கள் சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், அரசின் மிகப்பெரிய ஊழலுக்கு எதிராகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில், அரசுக்கு எதிரான போராட்டம் கலவரமாக வெடித்தது.

இதையடுத்து, இளைஞர்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், சமூக ஊடக செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நேபாள அரசு நேற்றிரவு திரும்பப் பெற்றது.

மேலும், இளைஞர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சரும், அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாண் அமைச்சரும் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

ஆனால், அரசின் ஊழலுக்கு எதிராக இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமையும் இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்தது.

இந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், காத்மண்டுவில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகளின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.

நாடாளுமன்றக் கட்டடம், அமைச்சரவைக் கட்டடங்கள், அரசு அலுவலகங்கள், பிரதமரின் தனிப்பட்ட இல்லம், அமைச்சர்களின் இல்லங்கள், காவல் நிலையம், சாலையில் நின்ற வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் நிலைமை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டை மீறியது.

இந்த நிலையில், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக சர்மா ஓலி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்த சர்மா ஓலி, அமைச்சர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, நேபாள தலைநகர் காத்மண்டு சர்வதேச விமான நிலையத்தை உடனடியாக மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

உக்ரைன் கடற்படையின் உளவுக் கப்பலான சிம்ஃபெரோபோல், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நாட்டால் இயக்கப்பட்ட மிகப்பெரிய கப்பலாகக் கூறப்படுகிறது, இது கடற்படை ட்ரோன் தாக்குதலில் மோதி மூழ்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

டிஜிட்டல் வரிகள் மற்றும் தொடர்புடைய விதிமுறைகளை நீக்காத அனைத்து நாடுகளுக்கும் "கணிசமான" புதிய வரிகளை விதிப்பதாகவும், அமெரிக்க சிப் ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதாகவும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று சபதம் செய்தார்.

காசா நகரத்தைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையின் முதல் நடவடிக்கைகளை இஸ்ரேல் அறிவித்ததை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வியாழக்கிழமை காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்.

தனது நீதிமன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான காட் இன் பிராவிடன்ஸ் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற இரக்கமுள்ள நீதிபதி ஃபிராங்க் காப்ரியோ, கணையப் புற்றுநோயுடன் நீண்ட மற்றும் துணிச்சலான போராட்டத்திற்குப் பிறகு தனது 88 வயதில் காலமானார்.

செவ்வாயன்று, உக்ரைன் அமைதி ஒப்பந்தம் சொர்க்கத்திற்குச் செல்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார் - முத்து வாயில்களைக் கடந்து செல்வதற்கான வாய்ப்புகள் தற்போது குறைவாக இருப்பதாக அவர் நகைச்சுவையாகக் கூறினார்.

ஐரோப்பியத் தலைவர்களின் அசாதாரணக் குழுவுடன் திங்களன்று வெள்ளை மாளிகைக்குச் சென்ற உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடன் விரைவான சமாதான உடன்படிக்கைக்கு திரு. டிரம்ப் அழுத்தம் கொடுக்கும்போது, ஜனாதிபதி டிரம்புடனான ஒரு அன்பான சந்திப்பைப் பயன்படுத்தி தனது நாட்டின் நலன்களைப் பாதுகாத்தார்.

மற்ற கட்டுரைகள் …