உலகை அச்சுறுத்திய கோவிட் -19 வைரஸின் புதிய மாறுபாடான டெல்டா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் பரவி வருகின்றது.
இத்தாலியில் ஆகஸ்ட் முதல் ' கீரீன்பாஸ் ' கட்டாயமாகிறது !
இத்தாலியில் ஆகஸ்ட் 6ந் திகதி முதல் உணவகங்கள், ஜிம்கள், சினிமாக்கள் மற்றும் பலவற்றிற்கு கோவிட் 'கிரீன் பாஸ்' கட்டாயமாக்குகிறது. இதற்கான புதிய ஆணையின் கீழ் வியாழக்கிழமை கையெழுத்திட்ட பின், சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
சுவிற்சர்லாந்தில் பெரு நிகழ்வுகள் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் !
சுவிற்சர்லாந்தில் நடைபெறும் பெருநிகழ்வுகளில், நோயெதிர்ப்பு இல்லாத பங்கேற்பாளர்கள் அதிகமாக இருப்பதால், பெருந்தொற்றின் ஆபத்து அதிகமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜேர்மனியில் வெள்ள நிவாரணத்திற்கு 400 மில்லியன் டாலர் அரசு ஒதுக்கீடு !
கடந்த வாரத்தில் ஜேர்மனியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகள், மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கான நிவாரணத்தை வழங்குவதற்காக, 400 மில்லியன் டாலர்களை ஒதுக்குவதற்கு ஜெர்மன் ஒப்புதல் அளித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் மற்றொரு கோவிட் தொற்று அலை ஏற்படலாம் !
சுவிற்சர்லாந்தில் தொற்றுநோய்களின் கூர்மையான அதிகரிப்பு மற்றும் தடுப்பூசி வீதத்தின் வீழ்ச்சி என்பவற்றை அவதானித்து, சுவிற்சர்லாந்தில் மற்றொரு கோவிட் தொற்று அலை ஏற்படலாம் என கூட்டமைப்பின் விஞ்ஞான பணிக்குழு எச்சரித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் வரும் வெள்ளி முதல் இடி, புயல், மழை அதிகரிக்கும் ?
சுவிற்சர்லாந்தில் கடந்த வாரம் நிலவிய கனமழைகாலநிலை மாறி சீராகி வரும் நிலையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் புயல் மற்றும் கனத்த மழையும் பெய்யலாம் என சுவிஸ் வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
இத்தாலியில் கோவிட் -19 தளர்வுகள் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் ?
இத்தாலியில் கொரோனா வைரஸ் வழக்குகள் மீண்டும் உயரத் தொடங்கும் போது, சுகாதார நடவடிக்கைகள் மீண்டும் செயல்படுத்தப்படும் ஒரு காலப்பகுதியாகவே சமகாலம் தெரிகிறது.