சுவிற்சர்லாந்தில், டெல்டா பிறழ்வு வேகமாக பரவி கோடையின் முடிவில் ஆதிக்கம் செலுத்தும் என்று சுவிஸ் தொற்றுநோயியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். சுவிஸில் தற்போது 70 சதவீதத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்களை டெல்டா பிறழ்வு கொண்டுள்ளது.
இத்தாலியில் டெல்டா மாறுபாட்டால் தொற்றுக்கள் அதிகரிப்பு !
இத்தாலியில், டெல்டா மாறுபாட்டின் பரவல் காரணமாக தொற்று விகிதம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் மற்றும் உயர் சுகாதார நிறுவனம் (ஐ.எஸ்.எஸ்) ஆகியவற்றின் வாராந்திர கொரோனா வைரஸ் கண்காணிப்பு அறிக்கையின் வரைவு தெரிவித்துள்ளது.
சுவிஸ் - ஐரோப்பிய ஒன்றியம் இன்று முதல் கோவிட் சான்றிதழ்களின் பரஸ்பர அங்கீகாரம் !
சுவிற்சர்லாந்தும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒருவருக்கொருவர் கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களை இன்று முதல் அங்கீகரிக்கின்றன. இதற்கான உடன்பாட்டினை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
யூரோ - 2020 இறுதிப் போட்டியை நேரில் காண இத்தாலியிலிருந்து வரும் 1000 பேருக்கு மட்டும் அனுமதி !
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யூரோ 2020 இறுதிப் போட்டி இங்கிலாந்தில் வெம்பிளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை நேரில் காண இத்தாலி ரசிகர்கள் பலரும் இலண்டனுக்குப் பயணமாக விரும்பிய போதும், 1,000 ரசிகர்கள் வரை மட்டுமே இத்தாலியில் இருந்து லண்டனுக்கு பயணிக்க முடியும் என்று இத்தாலியின் கால்பந்து கூட்டமைப்பு (FIGC) தெரிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் கொரோனாவின் மூன்றாம் அலை எவ்வாறு ஏற்படும் ?
சுவிற்சர்லாந்தில் நேற்று புதன் கிழமை மட்டும், ஏறக்குறைய 300 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த வார எண்ணிக்கையை விட கணிசமான அதிகரிப்பு எனத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிற்சர்லாந்தில் புதிய கோவிட் தொற்றுக்கள் ஒரு வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளன !
சுவிற்சர்லாந்தில் ஜுலை முதல்வாரத்தில் கோவிட் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை இரட்டடிப்பாகியுள்ளதாக மத்திய கூட்டாட்சி அரசின் சுகாதார அலுவலகம் அறிவித்துள்ளது.
இத்தாலியில் நடைபெறும் "ஈரோ 2020" போட்டிகளுக்கு இங்கிலாந்திலிருந்து ரசிகர்கள் வரமுடியாது ?
ஐரோப்பிய நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் 'ஈரோ 2020' காற்பந்தாட்டப் போட்டித் தொடர்களின் வரிசையில், எதிர்வரும் சனிக்கிழமை ரோமில் நடைபெறவுள்ள கால் இறுதிப் போட்டியில் உக்ரைனுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடுகிறது.