free website hit counter

மிகச் சிறந்த வாழ்வாதார நகரங்கள் குறித்த புதிய சர்வதேச கணக்கெடுப்பில் முதல் 10 இடங்களில், சூரிச் 7 வது இடத்திலும், ஜெனீவா 8 வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.

இத்தாலியில் செப்டம்பர் 30ம் திகதிக்குள், நாட்டின் பிரஜைகளில் ஒவ்வொரு பத்து பேரில் எட்டு பேருக்கு தடுப்பூசி போடுவது குறிக்கோள் என்று இத்தாலியின் அவசர ஆணையர் ஜெனரல் பிரான்செஸ்கோ தெரிவித்தார்.

சுவிற்சர்லாந்து நேற்று திங்கட்கிழமை ஜூன் 7 தனது கோவிட் -19 சான்றிதழின் நிறைவு வடிவத்தை வெளியிட்டது, இச் சான்றிதழ் எதிர்காலத்தில் பயணம் மற்றும் நிகழ்வுகளுக்கான சில உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் இத்தாலியின் வெனிஸ் கடற்பரப்பில் பெரும் சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள் மிதக்கவில்லை.

சுவிற்சர்லாந்தின் மாநிலங்களில், ஜூன் 7 திங்கள் முதல் முதல் கோவிட் சுகாதார சான்றிதழ்கள் வழங்கத் பணி தொடங்கும் என்று மத்திய கூட்டாட்சி அரசு நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

கோவிட்-19 பெரும் தொற்று வைரஸானது சீனாவால் தயாரிக்கப் பட்ட ஒரு உயிரியல் ஆயுதம் என அமெரிக்க முன்னால் இராணுவ அதிகாரியும் ,டாக்டருமான லாரன்ஸ் செல்லின் என்பவர் அண்மையில் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்திகாக இடப்படும் தடுப்பூசிகள் ஆறு மாதங்களுக்கும் மேலாகவும் நீடிக்கும் என்று சுவிஸ் சுகாதார அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …