free website hit counter

பிலிப்பைன்ஸை சமீபத்தில் தாக்கிய தசாப்தங்களில் இல்லாத மோசமான ராய் என்ற சூறாவளிக்கு பலி எண்ணிக்கை 375 ஆக உயர்வடைந்துள்ளது.

மிக மிக வேகமாகப் பரவக் கூடிய தனது இயல்பு காரணமாக உலகை இன்று அச்சுறுத்தி வரும் கோவிட் 19 வைரஸின் புதிய ஒமிக்ரோன் மாறுபாடு இதுவரை 77 உலக நாடுகளில் பரவியிருப்பது கண்டறியப் பட்டிருப்பதாகவும், இது உலகின் எப்பாகத்தையும் பாதிக்கலாம் என்றும் உலக சுகாதாரத் தாபனத்தின் இயக்குனர் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.

நேபாளத்தின் மிகப் பெரிய அரசியல் கட்சியான நேபாலி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பிரதமர் ஷேர் பஹதுர் டெயுபாவை புதன்கிழமை மீண்டும் அக்கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

7.3 ரிக்டர் அளவுடையை மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று கிழக்கு இந்தோனேசியாவை செவ்வாய்க்கிழமை GMT நேரப்படி அதிகாலை 3:20 மணிக்கு தாக்கியதில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டு பின்னர் மீளப் பெறப்பட்டுள்ளது.

மிக மிக வேகமாகப் பரவும் தனது இயல்பு காரணமாக உலகை அச்சுறுத்தி வரும் கோவிட் இன் புதிய மாறுபாடான ஒமைக்ரோன் 3 ஆவது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடையேயும் பரவுவது கண்டு பிடிக்கப் பட்டிருப்பது அமெரிக்க ஆய்வாளர்களை சற்று கலக்கமடைய வைத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை கிழக்கு சீனாவின் ஷடோங் மாகாணத்தில் யண்டாய் நகருக்கு அருகே கடற்பரப்பில் ஒரு கார்கோ கப்பல் நீரில் மூழ்கி விபத்தில் சிக்கியது.

அமெரிக்காவின் கெண்டக்கி, இல்லினாய்ஸ், உள்ளிட்ட 5 மாகாணங்களில் சனிக்கிழமை நள்ளிரவு தாக்கிய மிக மோசமான டோர்னிடோ எனும் சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பல நூற்றுக் கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப் படுவதாக பேரிடர் முகாமை அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: