free website hit counter

Top Stories

தஞ்சையில், முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததாகத் தொடரப்பட்ட புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை தஞ்சை காவல்துறை கைது செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, உதயநிதியை கைது செய்ய தடை கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீது பிற்பகலில் விசாரணை நடைபெறவிருக்கும் நிலையில், 11 மணியளவில், விசாரணைக்காக உதயநிதியை தஞ்சை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப் போக்கை கண்டிப்பதாக கூறி, தஞ்சாவூரில் திமுக சாா்பில் பனகல் கட்டடம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது தமிழக முதல்வர் விஜய் குறித்து கடுமையாக விமரிசித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருந்த நிலையில், இன்று காலை அவரது வீட்டைச் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிறகு, உதயநிதி வீட்டுக்குள் சென்ற காவல்துறையினர் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் பிரிவுகள் குறித்து விளக்கம் அளித்தனர். உடனடியாக உதயநிதி தன்னுடைய வழக்குரைஞர்களுடன் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தி, கைது நடவடிக்கையில் இருந்து தற்காத்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடினர்.

எனினும், அவரை தஞ்சை காவல்துறை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், உதயநிதியின் வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாகவும் பகல் 12 மணி வரை அவரை கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், தஞ்சை காவல்துறை, உதயநிதியை கைது செய்திருக்கிறார்கள். காவல் வாகனத்திலேயே அவர் தஞ்சை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (ஆக. 4) மாலை நடைபெறுகிறது.

இலங்கையில் அதிக எண்ணிக்கையில் நிகழும் இருசக்கர வாகனச் சாலை விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில், இலங்கை முழுவதிலுமுள்ள பிரதான சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கென பிரத்தியேகப் பாதைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியுமா? முடியாதா? என முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு தீர்வில்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய பல தளங்களை இந்தத் தாக்குதல்கள் குறிவைத்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது.

மனிதனுக்கு உலகில் மிகச் சிறந்த நண்பன் புத்தகம்தான். அறிவுசார் சொத்துக்களில் சேர்க்கவேண்டியதில் மிகப்பெரியது புத்தகங்களே!

ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.

நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும்  நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை  வளர்ப்பு.

"சும்மாயிரு".  எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில்,  நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.

யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.

Ula

Top Stories

சுவிற்சர்லாந்தின் தெற்குப் பகுதியில், டிசினோ (Ticino) மாகாணத்தில் அமைந்துள்ள அழகிய ஏரிக்கரை நகரமான லோகார்னோ ஆண்டுதோறும் உலகத் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக மாறுகிறது. அங்கு நடைபெறும் லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா (Locarno Film Festival), உலகின் மிகப் பழமையானதும், மிகுந்த மதிப்பும் பெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். புதிய கலைஞர்களை உலக அரங்கிற்கு அறிமுகப்படுத்துவதிலும், மாற்றுச் சினிமாவை ஊக்குவிப்பதிலும் இவ்விழா தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள டிரெயின் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

முதல்வரும் நடிகருமான விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

தமிழ்த்திரையுலகின் தவிர்க்கப்பட முடியாத பெருங்கலைஞனான பாரதிராஜா கலாமாகியதைத் தொடர்ந்து, சென்னையில்  அவருக்கு தமிழக முதல்வர் விஜய் முதலான  அரசியல் முக்கியஸ்தர்களும், திரைத்துறையினர், இரசிகர்கள் எனப் பலரும் நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது புகழுடல், சொந்த ஊரான தேனி மாவட்டத்தின் வத்தலக்குண்டு பகுதியிலுள்ள அவரது பண்ணை வீட்டுக்கு நேற்று எடுத்துவரப்பட்டது. 

Top Stories

Grid List

ஜோதிடத்தை அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியததென்பது பொதுவாக வைக்கப்படும் ஒரு வாதம். நுடபமாகக் கவனித்தால் அது ஓரு வானியல் அறிவு.

பன்னிரு இராசிகளுக்குமான வார ( ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 வரை) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.

ஈரான் தெஹ்ரானில் வளரும் ஒரு பெண்; அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தால்  தனது பதின்பருவத்தில் கஷ்டபடுகிறாள்,

வணிக சினிமாவில் கவிநடை பாடல் வரிசைகளின் நடுவே அசாதாரணமாக ஒரு சிறுகதையையே பாடல்வரிகளாக வெறும் கிதார் இசையுடன் கடத்தும் கபேர் வாசுகிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். 

4tamilMedia