free website hit counter

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடன் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக ஜெனிவாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துமாறு சுவிஸ் ஜனாதிபதி இக்னாசியோ காசிஸிடம் கேட்டுக் கொண்டுள்ளார் என சுவிஸ் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன.

உக்ரைன் தலைநகர் கியேவ் மீதான மொத்த தாக்குதலை முன்னெடுத்திருக்கு ரஷ்யப்படைகள் கார்கிவ் நகருக்குள் நுழைய முயல்கிறார்கள். ஆயினும் உக்ரைனின் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்கின்றார்கள் என்ற வகையில் கடுமையான யுத்தகளமாக மாறியிருக்கும் களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. தலைநகர் கியேவ் நோக்கி முன்னேறும் ரஷ்ய இராணுவப் படைகள் மெலிடோபோல் பகுதியைக் கைப்பற்றியுள்ளன.

உக்ரைன் தலைநகர் கீயேவ் மீது இன்று வெள்ளி அதிகாலை ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் தொடுத்துள்ளது. உக்ரைன் தலைநகர் நோக்கி முன்னேறும் ரஷ்ய துருப்புக்கள் கியேவிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மூண்டதைத் தொடர்ந்து, ஒரே நாளில் 100,000 பேர் போரிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தப்பி ஓடி அகதிகளாகியுள்ளார்கள் என ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான இராணுவ நடவக்கையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கோ போர் வெடித்தது. ரஷ்ய துருப்புக்கள் தலைநகர் பகுதிக்குள் நுழைந்துள்ளதை எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் படையினர் உறுதி செய்துள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: