free website hit counter

சுவிற்சர்லாந்தில் பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. தற்போதைக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் இது உயரவில்லை என்றாலும், சுவிஸின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடிகள் அடுத்த சில மாதங்களுக்குள் விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் விதிக்கப்பட்டிருந்த கோவிட் -19 பாதுகாப்பு விதிகளை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. ஏப்ரல் 1 முதல், குறிப்பிட்ட சூழ்நிலை தொடர்பான கோவிட்-19 கட்டளைச் சட்டத்தின் கடைசி விதிகள் ரத்து செய்யப்படும் என இன்று சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசு அறிவித்துள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரம் கோவிட் தொற்று காரணமாக மீண்டும் பூட்டப்பட்டுள்ளது. இதனால் சீன பெருநகரத்திற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உக்ரைன் யுத்தம் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக கடுமையாக நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்குமிடையிலான இஸ்தான்புல்லில் ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகளுக்கான ஒப்புதலை நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன.

சுவிற்சர்லாந்தில் ஏப்ரல் 1ம் திகதி முதல் கோவிட் - 19 பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தவிக்கபடுவதனால் நாடு முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலியிலுள்ள ரஷ்யர்களுக்குச் சொந்தமான படகுகள் மற்றும் சொகுசு உல்லாச விடுதிகளைக் கைப்பற்றுமாறு உக்ரைனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, நேற்று இத்தாலியப் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போது, இத்தாலியை வலியுறுத்தினார்.

சுவிற்சர்லாந்தின் கிராஸ் மித்தன் மீது மலை மீது, உலகின் மிகப்பெரிய அமைதிப்புறா பறக்கவிடப்பட்டுள்ளது. உலக அமைதிக்கு ஒரு முன்மாதிரியாக யுனிசெஃப் நிறுவனத்தால் இந்த முயற்சி சுவிற்சர்லாந்தின் அல்ப்ஸ் தொடரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: