free website hit counter

இந்திய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா 

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய தொடர் போரட்டம் மாணவர்களின் போராட்டமாக உருவெடுத்து நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், போராட்டக்காரர்களின் முதலாவது கோரிக்கையை ஏற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்  பதவி விலகியுள்ளார்.

இந்நிலையில் தமது அடுத்த கோரிக்கைகளான,  நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வைத்து மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த கோரிக்கைகள அனைத்தும் நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று  தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula