இத்தாலியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், பொருளாதார நிபுணராகவும் இருந்த பிரதமர் மாரியோ டிராகி தனது பதவியை இன்று ராஜினாமாச் செய்தார். 2021 பிப்ரவரியில் அவர் பதவியேற்றபோது அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் பெற்றிருந்தார்.
டென்மார்க் தலைநகரில் துப்பாக்கிச்சூடு பயங்கரம் !
டென்மார்க் தலைநகர் கோப்பனேகனின் கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில், மூவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இத்தாலியை இந்த வாரம் கடுமையாகத் தாக்கவுள்ள வெப்பநிலை !
இத்தாலியில் ஏற்கனவே 'ஹன்னிபால்' என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்க, துனிசியா மற்றும் அல்ஜீரியா பகுதிகளில் இருந்து வீசும் வெப்பக் காற்று ஒரு அசாதாரண வெப்ப அலையை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலிய குரங்கு அம்மை தொற்றுப் பாதிப்பு ஏழாக உயர்ந்தது !
இத்தாலியில் குரங்கு அம்மைத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளதாக அறியவருகிறது. தலைநகர் ரோமில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் ஐந்தாகவும், டஸ்கன் மற்றும் லோம்பார்டியா பகுதிகளில் தலா ஒவ்வொரு தொற்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இத்தாலிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுவிற்சர்லாந்திலும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது !
சுவிற்சர்லாந்திலும் முதலாவது குரங்கு அம்மை நோயாளி கண்டறியப்பட்டார். இதுவரை உலகம் முழுவதும் 80 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுவிஸ் அதிகாரிகள் , வெளிநாட்டில் வைரஸ் தொற்றுக்கு ஆளான ஒருவரைத் தலைநகர் பெர்னில் கண்டறிந்துள்ளனர்.
இத்தாலியில் குரங்கு அம்மை தொற்று !
குரங்கு அம்தை என்பது ஒரு அரிய வைரஸ் தொற்று. இது மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டது. சமீபத்தில் கேனரி தீவுகளில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மைநோய் அடையாளம் காணப்பட்டதாக ரோமின் தொற்று நோய்களுக்கான ஸ்பல்லாஞ்சனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் கோடை வெப்பநிலை 40 பாகை வரை உயரலாம் !
சுவிற்சர்லாந்தில் இவ்வருடக் கோடைக்கால வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என அறிய வருகிறது.