சுவிற்சர்லாந்தில் தற்போதுள்ள நோய்த்தொற்றுகளில் 77 சதவீதத்திற்கு காரணமான ஓமிக்ரான் தொற்றுக்கள் ஜனவரி கடைசி வாரத்தில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியில் திங்கட்கிழமை முதல் கோவிட் விதிகள் கடுமையாக மாறுகின்றன ?
இத்தாலியில் தொடர்ந்து தொற்று விகிதம் அதிகரித்து வருவதால், கடுமையான கோவிட் விதிகளை கொண்டு வருவதற்கு அரசு முடிவுசெய்துள்ளது. கோவிட் விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்த், அதிகமான பகுதிகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட 'மஞ்சள்' மண்டலங்களாக மாற்றம் பெறுகின்றன.
சுவிற்சர்லாந்தில் முன்னெப்போதும் இல்லாதவகையில் பரவும் தொற்றுக்கள் !
சுவிற்சர்லாந்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கோவிட் தொற்று நிலைமை மோசமடைகிறது. காட்டுத்தீ போல் ஓமிக்ரான் பரவி, வேகமாக மோசமடைந்து வரும் தொற்றுநோயியல் நிலைமை குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுவிற்சர்லாந்து அவசியமெனில் பூட்டுதலுடன் கூடிய நடவடிக்கைகளை அறிவிக்கலாம் - சுகாதார அமைச்சர்
சுவிற்சர்லாந்தில் வேகமாகப் பரவி வரும் கோவிட் பெருந்தொற்றுக்களுக்கு எதிரான, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு புதன்கிழமை முடிவு செய்துள்ளது. இருப்பினும் நிலைமை தொடர்ந்து மோசமடைந்தால் மட்டுமே மூடுதல் உட்பட கடுமையான நடவடிக்கைகள் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐரோப்பா முழுவதிலும் அதிகரித்துள்ள கோவிட் தொற்றுக்கள் !
நத்தார், புதுவருடக் கொண்டாட்டங்களின் பின்னதாக, எதிர்பார்த்ததைவிடவும் அதிகமான கோவிட் தொற்றுக்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸ் புதிய தினசரி கோவிட் தொற்றுக்களாக 270,000 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் எதிர்பார்த்ததை விட அதிக தொற்றுக்கள் !
சுவிற்சர்லாந்தில் பண்டிகைக் காலத்தின் பின்னதாக நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக உள்ளது.
சுவிற்சர்லாந்தின் மக்கள்தொகையில் பாதி பேர் விரைவில் கோவிட் பாதிப்புக்கு உள்ளாகலாம் ?
சுவிற்சர்லாந்தின் அனைத்து மாநிலங்களிலும், ஐம்பது சதவீத மக்கள் ஒரு சில வாரங்களில் கொரோனா வைரஸைக் கொண்டிருக்கலாம் என கோவிட்-19 பணிக்குழு உறுப்பினர் ரிச்சர்ட் நெஹரின் எதிர்வு கூறியுள்ளார்.