free website hit counter

ஆப்கானிஸ்தான் மீண்டும் ஒருமுறை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி விடக் கூடாது என்றும், அங்கு தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்றும், ஆப்கான் மீண்டும் இருண்ட யுகத்துக்குச் சென்று விடக் கூடாது என்றும் திங்கட்கிழமை ஐ.நா பாதுகாப்பு சபையில் நடந்த சந்திப்பில் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரான அவுக்லேண்டில் செவ்வாய்க்கிழமை 1 நபரிடம் கோவிட்-19 தொற்று இனம் காணப் பட்டதை அடுத்து அங்கு நாடு முழுதும் 3 நாட்களுக்கு அதிரடி லாக்டவுன் உத்தரவைப் பிறப்பித்துள்ளார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்.

சமீபத்தில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒரு முறை தமது ஆட்சியை நிலை நிறுத்தி உள்ளனர் தலிபான் போராளிக் குழுவினர்.

சனிக்கிழமை காலை ஹைட்டி தீவை உலுக்கிய மிகவும் சக்தி வாய்ந்த 7.2 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கத்துக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 1300 ஐ எட்டியிருப்பது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அண்மையில் ஆப்கான் தலைநகர் காபூல் உட்பட அனைத்து முக்கிய பகுதிகளையும் தலிபான்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிலையில், ஆப்கானை விட்டு வெளியேறுவதற்காக பெரும் திரளான மக்கள் காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.

ஆப்கானில் வேகமாக முன்னேறி வரும் தலிபான்களால் சமீபத்தில் ஜலாலாபாத் என்ற முக்கிய நகரும் கைப்பற்றப் பட்டதுடன் தலைநகர் காபூலும் சுற்றி வளைக்கப் பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: