free website hit counter

அன்பே சிவமாகும். இந்த அகிலமெங்கும் பரந்து செறிந்து நிறைந்து வாழும் ஜீவன்கள் அனைத்திலும் அன்பு நிறைந்து இருக்கிறது. அந்த அன்புக்குள் சிவம் ஒளிந்திருந்து. எம்மை ஆட்கொள்கின்றான்.

மலையைப் போன்ற உறுதி, பலம் மிக்க செயல், தைரியம் தரும் உத்வேகம் இவற்றைக் கொடுப்பவள் மலைமகள், அலைக்கழிக்கப்படும், பொருள் அலைபோன்று அசைந்து கொண்டே இருக்கும் செல்வம் நிலையை உயர்த்திடவும், ,தாழ்த்திடவும் செய்யும் தனம் இவற்றைக் கொடுப்பவள் அலைமகள், நிலையான கல்வியும் கலைகளினால், தெளிந்த நல் அறிவையும் ஆக்கத்திறனையும் தருபவள் கலைமகள்.

முழுமுதற் கடவுளாம் மூலபரம்பொருளாம் விநாயகரை விரதம் அனுஸ்டித்து வழிபடும் நாள் ஆவணிச்சதுர்த்தியாகும். தேவர்கள் இடர் தீர்த்து எல்லர உயிர்களையும் விக்கினமின்றி காப்பவர் விக்கினேஸ்வரராவர்.

எம்மையெல்லாம் காக்கும் கடவுளாம் ஶ்ரீமந்நாரயணரின் பத்து அவதாரத்தில் கிருஸ்ண அவதாரம் மிகவும் உண்ணதமானது. மகாபாரதம் பாரதப்போர் நிகழ இருந்த சமயத்தில் நிலை குலைந்து நின்ற அருச்சுனனுக்கு கீத உபதேசம் செய்து நிலை தெளிய வைத்தார்.

"அன்ன வயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல்பதியமின்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

மற்ற கட்டுரைகள் …