free website hit counter

ஶ்ரீ இராமபிரான் திருமாலின் தசவதாரத்தில் ஒரு அவதாரமாகத்தோன்றியவர். அந்நாள் நவமித்திதி எனும் படியாதலால் இராமநவமி ஆக போற்றப்படுகிறது.

செளபாக்கியங்கள் யாவும் எப்போதும் நிறைந்து இருக்கவேண்டும் என்றே இப்பூவுலகில் வாழும் அனைவரும் விரும்புவர். அப்படிப்பட்ட செளக்கியத்தை வாரி வளங்கி ஆனந்தம் அளிப்பவர் எமது அன்னை.

பங்கு= நீ ,என்பது பங்குனி மாதம் எனக் கொண்டு உத்தர நட்சத்திரமாகிய நாளில் இருமனங்கள் இணையும் திருமணநாளாக ஆலயங்களில் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்வர்.

மலையைப் போன்ற உறுதி, பலம் மிக்க செயல், தைரியம் தரும் உத்வேகம் இவற்றைக் கொடுப்பவள் மலைமகள், அலைக்கழிக்கப்படும், பொருள் அலைபோன்று அசைந்து கொண்டே இருக்கும் செல்வம் நிலையை உயர்த்திடவும், ,தாழ்த்திடவும் செய்யும் தனம் இவற்றைக் கொடுப்பவள் அலைமகள், நிலையான கல்வியும் கலைகளினால், தெளிந்த நல் அறிவையும் ஆக்கத்திறனையும் தருபவள் கலைமகள்.

முழுமுதற் கடவுளாம் மூலபரம்பொருளாம் விநாயகரை விரதம் அனுஸ்டித்து வழிபடும் நாள் ஆவணிச்சதுர்த்தியாகும். தேவர்கள் இடர் தீர்த்து எல்லர உயிர்களையும் விக்கினமின்றி காப்பவர் விக்கினேஸ்வரராவர்.

எம்மையெல்லாம் காக்கும் கடவுளாம் ஶ்ரீமந்நாரயணரின் பத்து அவதாரத்தில் கிருஸ்ண அவதாரம் மிகவும் உண்ணதமானது. மகாபாரதம் பாரதப்போர் நிகழ இருந்த சமயத்தில் நிலை குலைந்து நின்ற அருச்சுனனுக்கு கீத உபதேசம் செய்து நிலை தெளிய வைத்தார்.

மற்ற கட்டுரைகள் …