free website hit counter

செவ்வாய்க்கிழமை பிரான்ஸில் டிரோமே மாகாணத்திலுள்ள சிறு நகரமொன்றில் கொரோனா தொற்றுக்குப் பின் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் மக்களை சந்தித்து உரையாடுவதற்காக அவர்களை நெருங்கி சென்ற போது யாரும் எதிர்பாராத விதத்தில் ஒரு நபர் திடீரென அதிபரது கன்னத்தை அறைந்துள்ளார்.

பங்களாதேஷில் நடப்பில் இருக்கும் லாக்டவுனை இன்னமும் 10 நாட்களுக்கு நீடித்து அந்நாடு உத்தரவிட்டுள்ளதுடன் கோவிட்-19 பெரும் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளையும் இறுக்கமாக்கியுள்ளது.

மேற்குலக வல்லாதிக்கத்தில் இருந்து சேர்பிய மக்களைப் பாதுகாக்க தான் தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர் எனத் தன்னைக் காட்டிக் கொண்டார் முன்னால் பொஸ்னியன் சேர்பியன் இராணுவத் தளபதி ரட்கோ மிளாடிக்.

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் தெற்கே ஒரு மர்ம நபர் தான் ஓட்டி வந்த டிரக் வண்டியினை வேண்டுமென்றே ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் மீது மோதச் செய்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.

தைவானில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுக்கள் காரணமாக அங்கு ஜூன் 28 ஆம் திகதி வரை கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து, பள்ளிகள் மற்றும் ஏனைய இடங்கள் இன்னும் இரு கிழமைகளுக்கு மூடிய நிலையிலேயே இருக்கவுள்ளன.

உலகில் அருகி வரும் இனங்களில் ஒன்றான சிம்பன்ஸிக்களில் மிக வயதான சிம்பன்ஸி வட அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ விலங்குகள் காப்பகத்தில் மரணமடைந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டு இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர்; பிறந்த தங்களது இரண்டாவது குழந்தைக்கு லிலிபெட் என பெயரிட்டுள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: