free website hit counter

மார்ச் 2ஆம் திகதி நடைபெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் ஏப்ரல் 29ஆம் திகதி முதல் மே 9ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நடத்தப்படும்.

NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் SJB தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான உத்தேச விவாதத்தை மே 7,9,13,14 ஆம் திகதிகளில் ஒன்றில் நடத்துவதற்கு தயார் என்று தேசிய மக்கள் சக்தி (NPP) நேற்று உத்தியோகபூர்வமாக சமகி ஜன பலவேகய (SJB) க்கு அறிவித்துள்ளது.

கொழும்பு தாஜ் சமுத்திரத்தில் ‘ஸ்ரீ ராமாயணப் பாதைகள்’ திட்டம் உத்தியோகபூர்வமாக 21 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதன் மூலம் இந்திய-இலங்கை கலாசார மற்றும் சமயப் பிணைப்பில் ஒரு வரலாற்று மைல்கல் குறிக்கப்பட்டது. இந்த முயற்சியானது அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமையான சுற்றுலா முறைகளை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் பின்தள்ளவோ அல்லது கை விடவோ மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

2 மில்லியன் குடும்பங்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கொழும்பில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நிலவும் மோதல்கள் தீவிரமடைந்தால் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு பாதகமான பாதிப்பு ஏற்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: