free website hit counter

முறையான காரணத்திற்காக வரி ஏய்ப்பு செய்வதைக் குற்றமாகக் கருத முடியாது: சஜித்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முறையான காரணங்களுக்காக வரி ஏய்ப்பு செய்வதைக் குற்றமாகக் கருதி, அதனைத் தண்டிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்தும் ஒரு தீய நோக்கம் கொண்ட நகர்வு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.

இன்று தனது அலுவலகத்தில் வரி மற்றும் நிதித்துறை வல்லுநர்கள் குழுவைச் சந்தித்த பிரேமதாச, உடல்நலக்குறைவு அல்லது வெளிநாட்டுப் பயணம் போன்ற முறையான காரணங்களுக்காக வரி செலுத்தத் தவறுபவர்களைத் தண்டிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்தும் நகர்வு இருப்பதாகக் கூறினார்.

இது ஜனநாயக நெறிகளுக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கம் தொழில்முனைவோரை ஒருவித அச்ச மனநிலைக்குத் தள்ளும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula