free website hit counter

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 மீனவர்களுடன் இலங்கை மீன்பிடி இழுவை படகு மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்திற்கு பல தடவைகள் தலைமறைவான குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு தேனிலவுக்காக பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சிண்டிகேட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மோசடிகளை ஒழிப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் உறுதியளித்துள்ளார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட இலங்கை மீன்பிடி இழுவை படகு மற்றும் அதன் பணியாளர்களை விடுவிக்க 39 நாடுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கடல் படையிடம் இலங்கை உதவி கோரியுள்ளது.

இலங்கையுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) விரைவில் கைசாத்திடப்படும் என இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் அழிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: