தேமுதிக நிறுவனரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என்று பிரதமர் அழைப்பார் என்று கூறிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அது தொடர்பான
வீடியோ ஒன்றையும் தனது சமூக வலை தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந் நிலையில், பிரமேலதாவின் பதிவுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அதில் பிரேமலதாவின் பதிவை இணைத்து, விஜயகாந்தை புகழ்ந்துள்ளார்.
அதில் தனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர் என்றும் தானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் செய்த சமூக பணிகள் பல தலைமுறைகளை தாண்டியும் நிலைத்திருக்கும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்