free website hit counter

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. 

நாட்டில் சட்டத்தின் இறையாண்மை சவாலுக்குள்ளாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 

இன்று அதிகாலை முதல் அமல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பூரணை தினம் என்பதால் பொது மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் நோக்கில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகியுள்ளார். 

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து, பல்லாண்டுகளாக சிறைகளில் வாடும் முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். 

இன்று பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 93பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை காலை முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: