இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சிண்டிகேட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மோசடிகளை ஒழிப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் உறுதியளித்துள்ளார்.
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட இலங்கை மீன்பிடி இழுவை படகு மற்றும் அதன் பணியாளர்களை விடுவிக்க 39 நாடுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கடல் படையிடம் இலங்கை உதவி கோரியுள்ளது.
பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் அழிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தேர்தலுக்கு தயாராகும் போது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான விரிவான திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்களை அடையாளம் காண விசாரணை நடத்தப்பட்டுள்ளது.