பொருளாதாரம் ஸ்திரமடைவதற்கான அறிகுறிகளைக் காட்டினாலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தலுக்குப் பிறகு திடீர் கொள்கை மாற்றங்களால் இலங்கையின் மீட்சி ஸ்தம்பிதமடைந்துவிடும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி வெள்ளிக்கிழமை எச்சரித்தது.
இலங்கை முழுவதிலும் உள்ள 336 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் பராமரிப்பில் உள்ள சிறுவர்களுக்கான வருடாந்த பரிசுப் பொதிகள் விநியோகம் இன்று (ஏப்ரல் 13) நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சமகி ஜன பலவேகய (SJB) உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் G.L. பீரிஸ் மற்றும் ஏனையோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தேவையான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, காய்கறிகள், முட்டை, கோழி மற்றும் பழங்கள் சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமைச்சர்கள் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதை அடுத்து, முறையான முடிவு எடுக்கப்படும் வரை அனைத்து அமைச்சர்களும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதில் இருந்து கட்சித் தலைமையகம் தடை விதித்துள்ளது.
அடுத்த வருடத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் பட்சத்தில் வாகன இறக்குமதி தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.