அரசாங்கம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.
இன்று ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட 2024ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடனைப் பெறுவது மற்றும் அரச சொத்துக்களை விற்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி.திஸாநாயக்க, அரசாங்கம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு புதிய தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக, ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தமது பழைய மற்றும் தோல்வியுற்ற நடவடிக்கைகளை மீண்டும் முன்மொழிந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்தார்.