இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக நாளை, பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களைச் சந்திக்கின்றார்.
தமிழகத்தில் இன்று அமலுக்கு வரும் ஊரடங்கு தளர்வும் நீட்டிப்பும் !
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலையினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, இன்று 7வது முறையாக தளர்வுகளுடன் நீட்டிக்கக்கப்பட்டுள்ளது. கடந்த மே 24ம் திகதி முதல் ஒவ்வொரு வாரமும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான் : ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் உரை
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதன்போது பல்வேறு விடயம் குறித்துப் பேசினார் அதில் :
ஜம்மு விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்பு
இந்தியாவின் ஜம்மு விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் வருகின்ற ஜூலை 5 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் வருகின்ற ஜூலை 5 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை சந்தித்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் : முன்வைத்த கோரிக்கைகள்!
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீர் பிரதேச அரசியல் தலைவர்களை சந்தித்திருந்தார். இதன்போது ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பிரதமரிடம் முன்வைத்துள்ளதாக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் இரு தடுப்பூசிகளும் டெல்டா வைரஸ்சுக்கு எதிராக செயற்படக்கூடியவை
இந்தியாவின் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளும் கோவிட் -19 இன் டெல்டா திரிபு வைரஸ்சுக்கு எதிராக செயற்படக்கூடியவை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.