தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அண்மைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் குழுவிற்கு இடையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னர் மூன்று கேள்விகள் அல்ல, எட்டு கேள்விகள் கசிந்ததாகக் கூறியதால், முதல் தாள் மறு பரீட்சையை நடத்துவது குறித்து ஜனாதிபதி பரிசீலிக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.