free website hit counter

உத்தரகாண்டில் திடீர் வெள்ளத்தால் மூழ்கிய கிராமம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள ஹர்சில் அருகே உள்ள தராலி பகுதியில் இன்று திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டது.

இந்த மேக வெடிப்பைத் தொடர்ந்து, கிர் கங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள கட்டிடங்கள் இந்த திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அப்பகுதியில் வசிக்கும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், பலர் மண்ணில் புதையுண்டதாகவும் அஞ்சுகின்றனர்.

உள்ளூர் காவல்துறை, STRF, ராணுவம் மற்றும் தீயணைப்புப் படையைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த வெள்ளம் தொடர்பான இதயத்தை உடைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் பாயும் நீரில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், ஒரு பெரிய மேக வெடிப்பு காரணமாக ஒரு கிராமம் முழுவதும் நீரில் மூழ்கிய சம்பவத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. காட்டு வெள்ளத்தில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 60க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர், மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

வெள்ளத்தில் சேறு கலந்தால், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தராலி கிராமம் முழுவதும் மண்ணுக்குள் புதைந்துவிடும். காயமடைந்தவர்கள் ஹர்ஷில் உள்ள இந்திய ராணுவ மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து, முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், "நான் மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். அனைவரின் பாதுகாப்புக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" என்றார்.

முன்னதாக, உத்தரகண்ட் முழுவதும் பல இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஏற்கனவே எச்சரித்திருந்தது.

தற்போதைய பருவமழை காரணமாக, உத்தரகண்டில் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. பலத்த நீரோட்டங்கள் பாய்கின்றன. நேற்று, ஹல்த்வானி அருகே பக்ரா ஓடையின் வலுவான நீரோட்டத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார், நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை), புஜியாகட் அருகே ஒரு பெரிய ஓடையில் இரண்டு பேர் மூழ்கி இறந்தனர்.

ருத்ரபிரயாகில் இரவு முழுவதும் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மலைப்பகுதியில் இருந்து விழுந்த இடிபாடுகள் மற்றும் பாறைகளுக்கு அடியில் இரண்டு கடைகள் புதைந்துள்ளதாக மாநில அவசர செயல்பாட்டு மையம் தெரிவித்திருந்தது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula