அகமபாத் விமான நிலையத்திலிருந்து, லண்டன் கேட்விக் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட போயிங் ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில், விமான நிலையத்திற்கு அருகிலிருந்த மருத்துவ வளாகப் பகுதியில் விழுந்து வெடித்ததில், விமானத்தில் பயனம் செய்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விமானப் பயணிகள் 230 பேர், பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என, 242 பேரும் பலியாகியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. விபத்துக்குள்ளான விமானம் கடந்த இரு தினங்களாக தொழில் நுட்பத் திருத்தங்களுக்காக நிறுத்தப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.