free website hit counter

அண்மைக்கால பாதகமான காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 2024 G.C.E உயர்தரப் பரீட்சை நாளை (டிச. 04) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக, ஆசிரியர் சேவையில் நிரந்தர பதவிகளை வழங்குமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததால், இன்று (டிசம்பர் 2) பிற்பகல் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாதாவை நேற்று சந்தித்து முன்னாள் அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடினார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மின்சார கட்டணத்தை 30% இற்கும் மேலாக குறைக்கும் என வர்த்தகம், வணிகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

"புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டத்தை நாங்கள் முன்மொழிந்துள்ளோம். ஜனாதிபதியின் வாக்குறுதியின்படி, NPP அரசாங்கம் நிச்சயமாக அடுத்த மூன்று ஆண்டுகளில் 30% க்கும் அதிகமான மின் கட்டணத்தை குறைக்கும், ”என்று அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கணிசமாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். (நியூஸ் வயர்)

வாகன இறக்குமதி அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்துச் சென்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றசாட்டில் மூன்று நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் (டிஐடி)  கைது செய்துள்ளனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …