கண்டியில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹெராவை அடையாளப்படுத்தும் 205 மில்லிமீற்றர் கொண்ட உலகின் மிக நீளமான முத்திரை, இலங்கை தபால் திணைக்களத்தினால் செவ்வாய்க்கிழமை (20) வெளியிடப்பட்டது.
இந்த நினைவு முத்திரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.