ஜனாதிபதி தேர்தல் இவ்வருடம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட ஆணைக்குழு, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 16ஆம் திகதி இடையே தேர்தல்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பில் உள்ள விதிகளுக்கு அமைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.