இலங்கை தனது முதல் ஜல்லிக்கட்டை திருகோணமலையில் நடத்தியதுடன், நாட்டின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சரவணன் முருகன் சனிக்கிழமை நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
“ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம், சிலம்பம் சண்டை, படகுப் போட்டி, கடற்கரை கபடி போன்றவற்றை நடத்தவுள்ளோம். பொங்கலுடன் தொடர்புடைய பல நிகழ்வுகள் இங்கு நடைபெறுகின்றன. தமிழ் சமூகத்துடன் கலாசார நிகழ்வுகள் மீளமைக்கப்படுவதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.” என்று தொண்டமான் கூறினார்.
தொண்டமான் மற்றும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சரவணன் முருகன் ஆகியோர் திருகோணமலை சம்பூர் மைதானத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 200க்கும் மேற்பட்ட காளைகளும், 100க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கும் வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.
தொண்டமான் கூறுகையில், பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு, மாட்டுப் பொங்கல் தொடர்கிறது. 1008 பொங்கல் பானைகள் மற்றும் 1500 பரதநாட்டிய நடனக் கலைஞர்களுடன் பொங்கல் விழாவைத் தொடங்குகிறோம்.” என்றார்.