முள்ளிவாய்க்கால் தாக்குதலின் 15 வருடங்களை நினைவுகூரும் நிகழ்வில் வெள்ளவத்தையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறுதிக்கட்ட போரின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்த முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் பல்வேறு சிவில் சமூக குழுக்களையும் செயற்பாட்டாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவினர் வெள்ளவத்தை கடற்கரையில் இன்று காலை ஒன்று கூடினர்.
சிறீலங்காப் படைகளின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மற்றுமொரு ஆர்ப்பாட்டக்காரர்கள் நிகழ்வில் கலந்துகொண்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.