இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை மீண்டும் காலவரையின்றி தாமதமாகியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாண மாவட்டத்தின் காங்கேசன்துறை (கேகேஎஸ்) புறநகர்ப் பகுதிக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையானது, மே 13 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், "தொழில்நுட்பக் குறைபாடு" காரணமாக தாமதமாகியுள்ளதாக, டி சில்வா புதன்கிழமை தெரிவித்தார்.