free website hit counter

இலங்கையில் 40,000 போலி மருத்துவர்கள் இருப்பதாக GMOA எச்சரித்துள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் போன்று தோற்றமளிப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கவலை வெளியிட்டுள்ளது.
ஒரு அறிக்கையை வெளியிட்ட GMOA, 40,000 க்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவர்களாகக் காட்டிக்கொள்கின்றனர், புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் இதய நோய்கள் போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையின் பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களாகக் காட்டிக் கொள்வதுடன், மருந்துகளை பரிந்துரைப்பதும் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய GMOA, இது நோயாளியின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைக்கு தீர்வுகாண சிபாரிசுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் சுகாதார அமைச்சு இது தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்கத் தவறியமை வருத்தமளிப்பதாக GMOA தெரிவித்துள்ளது.

போலி வைத்தியர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு சுகாதார அமைச்சுக்கு அழைப்பு விடுத்துள்ள GMOA, இந்த நோக்கத்திற்காக தனது முழு உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: