இன்று(29) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி - எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும், அதன் புதிய விலை 340 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றரின் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 135 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அதன் புதிய விலை 375 ரூபாவெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை 80 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அதன் புதிய விலை 325 ரூபாவெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அதன் புதிய விலை 465 ரூபாவெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அதன் புதிய விலை 295 ரூபாவெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.