free website hit counter

தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடல் இன்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் பூதவுடல் பொரளை பொது மயானத்தில் நீதித்துறை மேற்பார்வையின் கீழ் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரியவின் மேற்பார்வையில் கீழ் இன்று(25) காலை சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

பொரளை பொது மயானத்தில் தொழிலதிபர் தினேஷ் சாப்டரின் சடலம் புதைக்கப்பட்டிருந்த இடத்திற்கு பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அகழ்வு பணியின் போது மறைந்த ஷாஃப்டரின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட நீதித்துறை மற்றும் சட்ட வைத்திய நிபுணர்கள் அடங்கிய ஐவர் அடங்கிய குழு வெள்ளிக்கிழமை (19) சடலத்தை தோண்டி எடுப்பதற்கு அனுமதியளிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கோரியது.

விசேட நிபுணர் குழுவின் கோரிக்கைக்கு அமைய வர்த்தகரின் உடலத்தை தோண்டி எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பொரளை பொது மயானத்தில் தனது காரில் கை கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் மீட்கப்பட்டார்.

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித கொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: