மின்சார நுகர்வோர் கட்டண திருத்த யோசனையை இறுதி செய்வதற்கு இலங்கை மின்சார சபையுடன் (CEB) திங்கட்கிழமை (ஜூன் 3) கலந்துரையாடல் இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் காலாண்டுக்கு ஒருமுறை கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும், செலவு-பிரதிபலிப்பு கட்டண பொறிமுறையை செயல்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த ஆண்டு கொள்கை முடிவை எடுத்ததாக 'X' இல் பதிவிட்ட அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, ஜூலை மாத கட்டண முன்மொழிவு இந்த வாரம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.