free website hit counter

இலங்கை டித்வா புயல் - இழப்பும் மீட்பும் !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் 'டித்வா'  புயல் ஏற்படுத்திய அனர்த்தங்களில் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாகவும், 367 பேரை காணவில்லை எனவும்  இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம்  இன்று மாலை​  தெரிவித்துள்ளது.

அதிகபட்ச உயிரிழப்புகளாக கண்டி மாவட்டத்தில்  88 மரணங்களும்,நுவரெலியா மாவட்டத்தில் 75 மரணங்களும், பதுளை மாவட்டத்தில் 71 மரணங்களும், குருநாகலில் 37 மரணங்களும், மாத்தளை மாவட்டத்தில் 23 மரணங்களும் பதிவாகியுள்ளன. 

கண்டி மாவட்டத்தில் 150 பேரும், நுவரெலியாவில் 62 பேரும், பதுளையில் 53 பேரும், கேகாலை மாவட்டத்தில் 46 பேரும், குருநாகலில் 35 பேரும் இதுவரை காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை  நாட்டு மக்களைப் பெருந்துயரம் சூழ்ந்துள்ள இந்தவேளையில், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி,பொதுமக்களைப் பீதியடையச் செய்யும் வகையில் பரப்ப வேண்டாம் எனவும், இவ்வாறு செய்திகளைப் பரப்புவது தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில்  புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், முப்படை பாதுகாப்புத் தலைமையகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். 

பதுளை மாவட்டம் , கண்டி மாவட்டம் , குருநாகல் மாவட்டம் , மாத்தளை மாவட்டம், நுவரெலியா மாவட்டம்  ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு முன்னெச்சரிக்கையை அனர்த்த முகாமைத்துவ நிலையம், அறிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில், தொடர்ந்தும் இராணுவத்தினர், விமானப்படையினர், மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் தொடர்ச்சியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இலங்கை விமானப்படையுடன். இந்திய அரசின் 'சாகர் பந்து ' நடவடிக்கை ஹெலிகொப்டர்களும், பாகிஸ்தான் விமானப்படை ஹெலிகொப்டர்களும், இணைந்து மீட்புபணிகளைத் தொடர்ந்து வருகின்றன.

மிக மோசமான இந்த இயற்கை அனர்த்தங்களின் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட ஒரு இலங்கை விமானப்படை பைலட் ஒருவரும், கடற்படையைச் சேர்ந்த ஐந்து பேரும் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்க்கபடுகிறது. 

‘டித்வா’புயற்காற்றினால் பேரழிவுக்கு உள்ளாகியிருக்கும் நாட்டினை,  மீளக் கட்டியெழுப்புவதை நோக்கில்,  ‘Rebuilding Sri Lanka’ எனும் பெயரில் ஒரு பொது நிதியத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ஒரு சட்டரீதியான நிதியமாக இது நிறுவப்படவுள்ளதுடன், அதன் முகாமைத்துவக் குழுவில் அரசாங்க மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையிலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

தொழில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அப்போன்சு ஒருங்கிணைப்பாளராக செயற்படும் வகையில் இந்நிதியத்தின் செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளது.  

இந்த நிதியத்தின் உறுப்பினர்களாக, வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும், மேல் மாகாண ஆளுநருமான ஹனீஃப் யூசுப் , நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும , ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ , வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணவர்தன , ஹேலீஸ் குழுமத்தின் தலைவர் மொஹான் பண்டிதகே , ஜோன் கீல்ஸ் தலைவர் கிரிஷான் பாலேந்திரன் , எயிட்கன் ஸ்பென்ஸ் துணைத் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான கலாநிதி பராக்கிரம திசாநாயக்க , பிராண்டிக்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ரோஃப் ஒமர் , LOLC இன் நிறைவேற்றுத் தலைவர் இஷார நாணயக்கார ஆகியோரும்  செயற்படுவார்கள் எனத் தெரிய வருகிறது.

தேவைகளை மதிப்பீடு செய்தல், முன்னுரிமைகளை நிர்ணயித்தல், நிதி ஒதுக்கீடு செய்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்குப் பணத்தை வெளியிடுதல் ஆகியவை இந்த பொறுப்புகளில் அடங்கும். உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள எந்தவொரு தனிநபரும் தமது நன்கொடைகளை இலங்கை ரூபாயிலோ அல்லது எந்தவொரு நாணய அலகிலோ இந்த நிதியத்திற்கான  இலங்கை வங்கி (Bank of Ceylon) கணக்கில் வரவு வைக்க முடியும். 

01. Account Name: Deputy Secretary to the Treasury Account Number: 2026450 Bank: Bank of Ceylon Taprobane branch Swift code: BCEYLKLX 

இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை வரவு வைக்கும் நன்கொடையாளர்கள் பின்வரும் கணக்குகள் மூலம் அனுப்பி வைக்க முடியும். 

வெளிநாட்டு நாணய அலகுகளுக்கான கணக்கு விபரங்கள் வருமாறு: 

1. US Dollar (USD) Bank: Deutsche Bank Trust Company Americas, New York, USA Recipient Account Name: Central Bank of Sri Lanka Account Number: 04015541 Routing Number: 021001033 SWIFT: BKTRUS33XXX 

2. Euro (EUR) Bank: ODDO BHF Bank, Frankfurt am Main, Germany Recipient Account Name: Central Bank of Sri Lanka Account Number: 0000739854 IBAN: DE39500202000000739854 SWIFT: BHFBDEFF500 

3. Pound Sterling (GBP) – Account 1 Bank: HSBC Bank Plc, London, UK Recipient Account Name: Central Bank of Sri Lanka Account Number: 39600144 Sort Code: 40-05-15 IBAN: GB48MIDL40051539600144 SWIFT: MIDLGB22XXX 

4. Pound Sterling (GBP) – Account 2 Bank: Bank of Ceylon (UK) Ltd, London, UK Recipient Account Name: Central Bank of Sri Lanka Account Number: 88001249 Sort Code: 40-50-56 IBAN: GB89BCEY40505688001249 SWIFT: BCEYGB2LXXX 

5. Japanese Yen (JPY) Bank: MUFG Bank, Tokyo, Japan Recipient Account Name: Central Bank of Sri Lanka Account Number: 653-0407895 SWIFT: BOTKJPJTXXX 

6. Australian Dollar (AUD) Bank: Reserve Bank of Australia Recipient Account Name: Central Bank of Sri Lanka Account Number: 81736-4 BSB: 092002 SWIFT: RSBKAU2SXXX

இது இவ்வாறிருக்க, இன்று பாராளுமன்றத்தில், நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களின் பின்னதாக எதிர்கட்சிகள் அவையிலிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை வடகிழக்குப் பகுதிகளில் வெள்ளநிலை தொடர்ந்த போதும், ளப்பெருக்கு அபாயநிலை தணிந்து வருவதாகவும், சில பாதைகளில் போக்குவரத்து ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula