free website hit counter

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி-சேலை தயாரிக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பொங்கல் வேட்டி சேலை திட்டத்துக்கு அரசு அனுமதி.
சென்னை,

பொங்கல் வேட்டி சேலை திட்டத்துக்கு ரூ.200 கோடியை அரசு ஒதுக்கி வேட்டி-சேலை தயாரிக்க அனுமதி அளித்துள்ளது.

இதன்படி 1 கோடியே 68 லட்சம் எண்ணிக்கையிலான சேலைகளையும் மற்றும் 1 கோடியே 63 லட்சம் வேட்டிகளையும் எதிர்வரும் பொங்கல் 2024-ம் ஆண்டு வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

பொதுமக்களுக்கு வேட்டி, சேலையினை விநியோகிக்கும் நடைமுறையினை முடிவு செய்ய ஏதுவாக, கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய்த் துறை தலைமையில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், வருவாய்த் துறை மற்றும் கைத்தறி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவினை அமைக்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வேட்டி-சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய, நியாய விலைக்கடைகளின் விற்பனை முனையத்தில் வேட்டி சேலைகளை வழங்கும்போது இந்த முறை விரல் ரேகை பதிவினை கட்டாயமாக்கப்படுகிறது.

இதனைத் தவறாது செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: