free website hit counter

உக்ரைன் போர் - துருக்கியில் பேச்சுவார்த்தை தோல்வி !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உக்ரைன் மோதலின் பதினைந்தாவது நாளில், ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் மற்றும் உக்ரேனிய டிமிட்ரோ குலேபா ஆகியோருக்கிடையில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததும் எதிர்பார்ப்பு மிக்கதுமான பேச்சுவார்த்தை துருக்கியில் இன்று நடைபெற்றது.

உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் துருக்கியில் ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் "அவர் சொல்வதைக் கேட்பது கடினமாக இருந்தது" என்றார். ரஷ்ய அமைச்சரும் கருத்து வெளியிடுகையில், "நாங்கள் எங்கள் கோரிக்கைகளை உக்ரைனிடம் தெரிவித்துள்ளோம். மேற்குலகம் ஆபத்தான முறையில் நடந்து கொள்கிறது" எனக் குறிப்பிட்டார். இவர்களது தகவல்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளில் உறுதியான படிகள் முன்னேற்றம் காணப்படவில்லை எனத் தெரிய வருகிறது.

இன்று துருக்கியின் அன்டலியாவில் உக்ரேனிய வெளியுறவு மந்திரி குலேபாவுடனான சந்திப்பின் முடிவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், ரஷ்ய வெளியுறவு மந்திரி லாவ்ரோவ் "ஜனாதிபதி புடின் ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பை மறுக்கவில்லை, ஆனால் ஆயத்த பணிகள் முதலில் செய்யப்பட வேண்டும்" என்று அறிவித்தார். உக்ரைன் எங்களிடம் உறுதியான பதில்களைத் தரும் என்று கூறியது, நாங்கள் காத்திருக்கிறோம். ரஷ்யாவிடம் வேறு எந்த ஐரோப்பிய நாட்டையும் தாக்கும் திட்டம் இல்லை. ஆனால் மேற்கு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறது." என்று தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் குறித்தும் பேசினார். "அணு ஆயுதப் போர் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை." எனக் குறிப்பிடட அவர், இறுதியாக, உயிரியல் ஆயுதங்களை உருவாக்க பென்டகன் உக்ரேனியப் பகுதியைப் பயன்படுத்துகிறது என்ற அமெரிக்கா மீதான குற்றச்சாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பேசிய உக்ரேனிய வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா, " சந்திப்பின் போது லாவ்ரோ கேட்டவை எளிதல்ல " என்று ஒப்புக்கொண்டார், மேலும் கோரிக்கைகளுக்கு இணங்கும் வரை ரஷ்யா தனது ஆக்கிரமிப்பைத் தொடரும் என்றே தெரிகிறது. "கணிசமான விவாதத்திற்கு" வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே லாவ்ரோவை மீண்டும் சந்திக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதற்காக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ நாளை மாஸ்கோ செல்லவுள்ளார். இத் தகவலை ரஷ்ய அரசு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: