free website hit counter

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தலைவராக இருந்த ஜனக ரத்நாயக்க அண்மையில் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளால் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் எம்.ஏ.ஆர். மஞ்சுள பெர்னாண்டோ கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இன்றைய தினம் அவர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி வெற்றிடத்திற்கு நிதியமைச்சராக பேராசிரியர் பெயர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்டது.

இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த ஆணைக்குழுவின் தலைவராக இருந்த ஜனக ரத்நாயக்க அண்மையில் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளால் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இவரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் கிடைக்கப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: