free website hit counter

Sidebar

06
ஞா, ஏப்
55 New Articles

பூமிக்கு மிக நெருக்கமாக தோன்றவுள்ள வெள்ளி மற்றும் வியாழ கோள்கள் இணையும் அபூர்வ காட்சி

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சூரிய குடும்பத்தின் பிரகாசமான இரண்டு கோள்கள் கிட்டத்தட்ட ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதை இன்று இரவு வானில் காணலாம்.

பூமியிலிருந்து மில்லியன் மைல் தொலைவில் இருக்கும் வெள்ளி மற்று வியாழ கோள்கள் இணைந்து செல்லும் அபூர்வ காட்சியை பூமியிலிருந்து பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் அமைந்துள்ளது.

இந்த கிரக சேர்க்கை ஆண்டுதோறும் நடப்பது என்றாலும் இந்த ஆண்டு அவை வழக்கத்தை விட மிக பூமிக்கு மிக நெருக்கமாக தோன்றும் என்றும் இனி 2039 வரை இதே காட்சியை காண காத்திருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறுங்கண்களை விட தொலைநோக்கி வழியாக தெளிவான வானத்தில் இக்காட்சியை பார்க்க போதுமானதாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைக்குப் பிறகு, வரும் நாட்களில் இரண்டு கிரகங்களும் தனித்தனியாகச் செல்லும்.

"இது வானியலாளர்களுக்கு மிகவும் உற்சாகமானது மற்றும் மக்கள் வெளியே வந்து பார்க்க இது ஒரு சிறந்த வாய்ப்பு" என்று விண்வெளி விஞ்ஞானியும் பிரபல வானியல் சங்கத்தின் தலைமை நட்சத்திரப் பார்வையாளருமான பேராசிரியர் லூசி கிரீன் விளக்குகிறார்.

பூமியின் இரவு வானில் இரண்டு கோள்கள் நெருக்கமாகத் தோன்றுவது அல்லது தொடுவது இணைதல் ஆகும்.

கோள்கள் வானத்தில் தாழ்வாக இருக்கும், அடிவானத்திற்கு அருகில் இருக்கும், மேலும் மலைகளும் கட்டிடங்களும் பார்வையைத் தடுக்கும். உங்களால் முடிந்தால், ஒரு உயரமான இடத்தைக் கண்டுபிடித்து, மிக நெருக்கமாக இரண்டு திகைப்பூட்டும் பிரகாசமான புள்ளிகளைத் தேடுங்கள் என வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வரும் ஜூன் 24, 2022 அன்று புதன், வீனஸ், செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கிரகங்களும் ஓரே நேர்கோட்டில் இணையும் சுவாரஸ்ய காட்சி அனுபவமும் காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula