ஊழல் மோசடிகள் பற்றி மாத்திரம் மற்றவர்கள் பேசும் போது, அதனை தடுப்பதற்காக பல சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமும் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் படி ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட எவரையும் தாம் ஒருபோதும் பாதுகாக்கவில்லை எனவும் விக்ரமசிங்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகப் பொறுப்பாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி, நாடு நிதியை இழக்க நேரிடும் என்பதால், சர்வதேச நாணய நிதியம் அல்லது கடன் வழங்குநர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
எனவே, அனைத்து வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்” என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க இன்று காலை கூட்டத்தின் போது தெரிவித்தார்.
"நான் எனது திறனை இரண்டு முறை நிரூபித்துள்ளேன், யாருடனும் போட்டி இல்லை. எனது கவனம் நாட்டை முன்னேற்றுவதில் உள்ளது,” என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.