free website hit counter

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பம்!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது. பிரித்தானியாவின் இலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன.

சர்வதேச கிரிக்கெட் பேரவை சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்படுகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த 11 உலகக் கோப்பை போட்டிகளில் அவுஸ்திரேலியா அதிகபட்சமாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

1975, 1979ஆம் ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகளும், 1983ஆம் ஆண்டு இந்தியாவும், 1987ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவும், 1992ஆம் ஆண்டு பாகிஸ்தானும், 1996ஆம் ஆண்டு இலங்கையும், 1999, 2003, 2007ஆம் ஆண்டுகள் தொடர்ச்சியாக அஸ்திரேலியாவும், 2011ஆம் ஆண்டு இந்தியாவும், 2015ஆம் ஆண்டு மறுபடியும் அவுஸ்திரேலியாவும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.

 

கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்த நாடான இங்கிலாந்து இது வரை ஒருமுறை கூட உலக கிண்ணத்தை வெல்லவில்லை. அதே போல் வலுவான அணிகளான நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்டவை முதன் முறையாக கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளன.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை ஏற்கெனவே 4 முறை நடத்தியுள்ள இங்கிலாந்து தற்போது 2019இல் 5ஆவது முறையாக நடத்துகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மொத்தம் 11 மைதானங்களில் ஆட்டங்கள் நடக்கின்றன.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: